(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிப்புள்ளாகி, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானம் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (02) புதன்கிழமை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் சீரமைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியோரின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விளையாட்டு கழகங்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை மாநகர பொறியியலாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆணையாளர் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK