இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போதும், நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் கொழும்பு மற்றும் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் அவ்வப்போது மூடப்படவுள்ளன.
இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லுவோர் தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பு காலி முகத்திடல் , சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லை அபேகம வளாக வீதிகள் மூடப்படவுள்ளன.
இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அனைத்து வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK