(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர், செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா, பிரதித் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், உபதலைவரும் ஜம்இய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவருமான மௌலவி அஷ்ஷேக் எம்.எம்.எம்.சலீம், உப செயலாளர்களான ஏஷர் மீீராசாஹிப், அபூபக்கர் பர்ஹாம், உப பொருளாளர் எம்.ஐ. நஜீம் உட்பட புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தினர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK