யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க ஜனாதிபதி அனுமதி


யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (31) காலை  10மணிக்கு ஆரம்பமாகியது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழி வகைகள் எதுவும் இருக்கிறதா? என யாழ்ப்பாண மாவட்ட செயலக மாவட்ட பதில் அரசாங்க அதிபரை ம.பிரதீபனிடம் ஜனாதிபதி வினவினார்.

அதற்கு பதிலளித்த மாவட்ட  பிரதீபன், எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒரு விடயமாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம் என அரச அதிபர் தெரிவித்தார்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்