எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.
மற்றையவர்கள் சம்பிரதாய அரசியலை பின்பற்றும்போது, அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதே தனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டீ.எஸ்.சேனநாயக்க - பண்டாரநாயக்க ஆகியோர் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பின்னர் இவ்வாறானதொரு கூட்டிணைவு அமைவது இதுவே முதல் தடவையாகும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போது, அரசியல் கட்சிகளின் நோக்கங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும், தற்போது எட்டப்படும் இந்த உடன்பாடுகள் வாயிலாக எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய வரைவொன்றைத் தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK