(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
தேசிய ரீதியின் பிரபல மோட்டார் குரோஸ் வீரர்களின் பங்குபற்றுதலுடன்.
கற்பிட்டி கே.ஆர்.சீ அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா ரேஸீங் கழகத்தின் பூரண அணுசரனையில் கற்பிட்டியில் மாபெரும் தேசிய ரீதியிலான பிரபல மோட்டார் சைக்கிள் வீரர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற உள்ள மாபெரும் மோட்டார் குரோஸ் பந்தயம் எதிர்வரும் 2024/08/04 ம் திகதி பிற்பகல் 01 மணிக்கு கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் மைதானத்தில் இடமபெற உள்ளது.
நீண்ட நாட்களாக பல்வேறு தடைகளால் இடைநிறுத்தப்பட்ட கற்பிட்டி மோட்டார் குரோஸ் பந்தயம் கற்பிட்டி கே.ஆர்.சீயின் தலைவர் ஜே.எம் தாரீகின் பாரிய முயற்சியினால் நுவரெலியா ரேஸீங் கழகத்தின் பூரண அணுசரனையில் நடைபெற உள்ள மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் பங்குபற்றுபவர்கள் அதன் கூட்டமைப்பில் பதிவு செய்யப்படுவதுடன் அனுமதி பத்திரமும் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். இதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் புதன்கிழமை 2024/07/17 ம் திகதி கற்பிட்டியில் நடைபெற உள்ளது எனவும் கற்பிட்டி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கு பற்ற விருப்பம் உடையவர்கள் அணைவரும் தவறாது எதிர்வரும் புதன்கிழமை முன்பாக விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கே.ஆர்.சீ அமைப்பின் தலைவர் ஜே.எம் தாரீக் தெரிவித்துள்ளார் .
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK