நளீன் திசாநாயக்க மற்றும் பியகம சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பியகம தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் நளீன் திசாநாயக்க மற்றும் பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் இன்று(28) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். 

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா முன்னிலையிலயே இவ்வாறு இணைந்து கொண்டனர். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா நகர சபைக்கு சுயேட்சை குழு 01 இல் போட்டியிட முன்வந்த உறுப்பினர்களும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.





News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்