சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் 2024 கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் பெரு வெற்றி

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் இம்முறை நடைபெற்ற கோட்ட மட்டத்திலான தமிழ்மொழித் தினப் போட்டிகளில் பங்குபற்றி பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.


ஒன்று தொடக்கம் ஒன்பது வரை வகுப்புகள் உள்ள இப்பாடசாலையில் 1ஆம், 2ஆம், 3ஆம் பிரிவு நிலைப் போட்டிகளில் பங்குபற்றி 7 முதலாம் இடங்களையும், 3 இரண்டாம் இடங்களையும், 4 மூன்றாம் இடங்களையும் பெற்று பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

மேற்படி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கும், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் மற்றும் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இப்பாடசாலை இணைப்பாட செயற்பாடுகளில் வருடா வருடம் பல சாதனை வெற்றிகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK