ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு!


ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பேச்சாளர் பட்டியலில் இடமில்லை என்ற காரணத்தினால் நவீன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் பங்கேற்காமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக நவீன் திஸாநாயக்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பேச்சாளர் பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என நவீன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கட்சியில் தாம் தொடர்ந்தும் இணைந்திருக்கப் போவதாகவும் கட்சிய விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK