பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம்....!


காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை வழங்காத இலங்கையில், சீன முதலீட்டை ஊக்குவிப்பதற்காக செயற்பட்டதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் மீது பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோன் மெக்டொனாஹ் குற்றம் சுமத்தியுள்ளார்.


பிரித்தானிய நாடாளுமன்றத்தில், சியோன் மெக்டொனாஹ் நேற்று (23.11.2023) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“டேவிட் கமரூன் இணைந்து பணியாற்றிய சீன கன்ஸ்ட்ரக்சன் கம்யூனிகேஷன் என்னும் நிறுவனம் அமெரிக்கா மற்றும் உலகவங்கியால் இலஞ்ச குற்றச்சாட்டின் காரணமாக கருப்புபட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனமாகும்.

தீர்க்கப்படாத இலங்கையின் பிரச்சினைகள்

இலங்கை போர் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, 2009இல் போர் முடிவடைந்த போதிலும் காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை அளிக்காமல் உள்ளது.

இந்நிலையில், டேவிட் கமரூன் பணத்திற்காக சீன அரச நிறுவனமொன்றுடன் இணைந்து, சீனாவின் முதலீட்டில் துறைமுகம் ஒன்றினை கட்டுவதற்கு இலங்கையை ஊக்குவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், டேவிட் கமரூன் பிரித்தானிய மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் சீன அரசாங்கத்தின் பணியாளரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பிரித்தானிய மக்களுக்கு உண்டு” என தெரிவித்தார்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK