“மகனாரின் சபை”க்காக அதாவுல்லாஹ்வின் மூத்த மகன் மூன்றாவது தடவை; இளைய மகன் இரண்டாவது தடவையாகவும் போட்டி


அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இரண்டு புதல்வர்களும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் அதாஉல்லாவின் மூத்த புதல்வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான அஹமட் சக்கி – மூன்றாவது முறையாக அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இதேவேளை அதாஉல்லாவின் இளைய மகன் அஹமட் டில்ஷான் என்பவர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இரண்டாது தடவையாக இம்முறையும் போட்டியிடுகின்றார். இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவானார்.

அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட அதாஉல்லா, கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது, பிரதேச சபை தரத்தில் இருந்த அக்கரைப்பற்றை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை என இரண்டாகப் பிரித்தார்.

அந்த வகையில் அக்கரைப்பற்று மாநகர சபை உருவாக்கப்பட்டதிலிருந்து அதாஉல்லாவின் மூத்த புதல்வரே மேயராகப் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை கேலி செய்யும் வகையில், அக்கரைப்பற்று ‘மாநகர சபை’யை உள்ளூர் மக்கள் – ‘மகனாரின் சபை’ என குறிப்பிடுவதுண்டு.

அதாஉல்லா – தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்கின்ற தேசிய காங்கிரஸ் சார்பாகவே, அவரின் புதல்வர்கள் இருவரும் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தொடர்ச்சியாகப் போட்டியிடுகின்றனர்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்