அரச பணியாளர்களுக்கான அறிவிப்பு


 பணிகளில் ஈடுபடும்போது, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே இன்று இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி ஆண்கள் நீள் கால்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும்.

அதே நேரத்தில் பெண்கள் புடவைகள். கண்டியன் (ஓசாரி) அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிந்து. பொது சேவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும்.

இதேவேளை நாடாளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குள் அரச அதிகாரிகள் தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK