இந்தாண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இக்கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பவுள்ளன.

அறிவியல், வணிகம், தொழில்நுட்பம், கலை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.