விலைசூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிப்பு?


எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என ஆதாரங்களை மேற்கோள்காட்டி இன்று பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

92 மற்றும் 95 வகை பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 70 முதல் 80 ரூபாவினாலும், டீசல் மற்றும் சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றின் விலை 50 முதல் 70 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட இறுதி விலை அதிகரிப்பின் பிரகாரம் 92 லீற்றர் எரிபொருளின் விலை தற்போது லீற்றர் ஒன்றின் விலை 420 ரூபாவாகும்.

தற்போது நாட்டில் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும், டீசல் லீற்றர் 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 445 ரூபாவாகவும் உள்ளது.

புதிய எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை விலையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இறுதியாக இந்த விலை சூத்திரம் மே 24 அன்று நடைமுறைக்கு வந்தது.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK