முள்ளிப்பொத்தானை சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு ஜெனெரேட்டர் அன்பளிப்பு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முள்ளிப்பொத்தானை சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனினால் 7kw தர ஜெனெரேட்டர் (23) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ்னால் சிறாஜியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எ.எம்.எம்.நஸீரிடம் குறித்த ஜெனரேட்டர் கையளிக்கப்பட்டது.

சுமார் 200 க்கு மேற்பட்ட கிதாப் மற்றும் ஹிப்ழ் ஆண் மாணவர்களைக் கொண்ட சிறாஜியா அரபுக்கல்லூரியில் மாணவர்கள் மின்வெட்டுக் காலங்களில் கற்றல் நடவடிக்கைகளின்போது மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். 

இது தொடர்பாக சமூகசேவையாளரும் அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் இன் கவனத்திற்கு கொண்டுவந்ததிற்கிணங்க சிறாஜியா  அரபுக்கல்லூரியின் வேண்டுகோளை துரிதமாக நிறைவேற்றி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK