குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான ஷாபி சிஹாப்தீனின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பௌத்த மத பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வகையிலான சத்திரசிகிச்சை செய்வதாக, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கட்டாய விமுறையில் அனுப்பப்பட்டு பின்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
ஆயினும்,குறித்த விடயங்கள் தொடர்பில் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளில் குறித்த குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையுமற்றவை என நீதிமன்றம் அறிவித்ததோடு, அவர் நிரபராதி என அறிவித்து விடுதலை செய்திருந்தது.
அதற்கமைய, அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வேளையிலும் பணி இடைநிறுத்தத்தில் இருந்த காலப்பகுதியிலும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் தற்போது நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK