ஹஜ் கொத்தணி ஒன்றினை முஸ்லிம்கள் உருவாக்கி விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் அளாகாது, அவதானமாக நடக்க வேண்டும் - என்.எம்.அமீன்


முஸ்­லிம்கள் கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளையும் அது தொடர்­பான சட்ட திட்­டங்­க­ளையும் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்­க­ வேண்டும் எனவும் ஹஜ் பெருநாள் தினத்தில் இவ்­வி­ட­யத்தில் மிக அவ­தா­ன­மாக நடந்து கொள்ள வேண்­டு­மெ­னவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார்.

இவ்­வி­ட­யத்தில் முஸ்­லிம்கள் அச­மந்­தப்­ போக்­குடன் செயற்­பட்டால் ‘ஹஜ் கொத்­தணி’ ஒன்­றினை முஸ்­லிம்கள் உரு­வாக்­கி­ விட்­டார்கள் என்ற பழிச்­ சொல்­லுக்கு நாம் ஆளா­வ­துடன் பல பிரச்­சி­னை­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

சவூதி அரே­பியா இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­குக்­கூட கடு­மை­யான கட்டுப்பா­டு­களை விதித்­துள்­ளதை நாம் மனதில் கொண்டு செயற்­பட வேண்­டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற கூட்­டத்தில் அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஷில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் டாக்­டர்கள் வக்பு சபை பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது கொவிட் கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK