முஸ்லிம்கள் கொவிட் 19 வழிகாட்டல்களையும் அது தொடர்பான சட்ட திட்டங்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஹஜ் பெருநாள் தினத்தில் இவ்விடயத்தில் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அசமந்தப் போக்குடன் செயற்பட்டால் ‘ஹஜ் கொத்தணி’ ஒன்றினை முஸ்லிம்கள் உருவாக்கி விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் ஆளாவதுடன் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
சவூதி அரேபியா இவ்வருட ஹஜ் கடமைக்குக்கூட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை நாம் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஷில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் டாக்டர்கள் வக்பு சபை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK