கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அது கொழும்பு அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட இருப்பதாக அந்த நேரத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஹரின் பெர்னாண்டோ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"பிரபல இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டபாய ரணசிங்க தலைமையிலான அற்புதமான குழுவினருக்கு எனது நன்றிகள். சிக்கலான சிகிச்சை, இதற்கு வெளிநாட்டு சிகிச்சை தேவை,
எனினும், இந்த சிறந்த குழுவினரால் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடவுளுக்கும் நன்றி” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK