'மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது; இலங்கை இனவாத அரசின் முஸ்லிம் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது' - இந்திய சமூக ஜனநாயகக் கட்சி!


இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கோடு செயல்பட்டு வருகிறது.

இனவாத இலங்கை அரசு முதலில் ஈழத்தமிழர்களை குறிவைத்து வேட்டையாடியது. இப்போது முஸ்லிம்களை குறிவைத்து, தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

சிறுபான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும்

பெரும்பான்மை சிங்கள இனவெறிதான், தனது நோக்கம் என்பதனை இலங்கை அரசு நிரூபித்து வருகிறது.

இதன் தொடர்ச்சிதான் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களுக்கு தடை விதிப்பது, முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பது, முஸ்லிம் தலைவர்களை கைது செய்வது என்ற இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள்.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசு தனது இனவாத, சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


K.K.S.M. Dhehlan Baqavi (SDPI)

தெஹ்லான் பாகவி

தேசிய துணைத்தலைவர்

SDPI கட்சி


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK