அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி..!


அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் சிலர் இன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதுவரை தமது சேவையை நிரந்தரமாக்கவில்லை என குற்றம்சாட்டியே அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நிறைவடைந்துள்ளது. ஒரு வருட பயிற்சியின் பின்னர் அரச சேவையில் நிரந்தரமாக்குவதாக வாக்குறுதியளித்து இணைக்கப்பட்ட பயிற்சி பட்டதாரிகளின் பயிற்சி காலம் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவர்களின் சேவை நிரந்தரமாக்கப்படவில்லை என பேரணியில் கலந்து கொண்டிருந்த ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK