அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு


சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான முன்னாள் உயர் ஸ்தானிகர் செய்யித் ராத் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின் போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியமை தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி ஹவ்லொக் வீதியை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக  இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK