இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது - கொழும்பு பிரதான நீதவான் அறிவிப்பு...!


ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவான இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாய்ல் இன்று நீதிமன்றுக்கு அறிவித்தார்.

போலி காணி உறுதிப்பத்திரங்களை உருவாக்கி தலை மன்னார் பகுதியில் உள்ள 80 ஏக்கர் காணியை விற்பனை செய்தமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ள போதும் அவ்வாறான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆராய்ந்த நீதவான், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னெற்ற அறிக்கையை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK