மஹர சிறைச்சாலை மோதலுக்கான காரணம் வௌியானது


பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே மஹர சிறைச்சாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசித உடுவர தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் கொனாகோவிலே ரொஹவின், மாளிகாவத்தை சுரேஷின், கனேமுல்ல சஞ்சீவவின் மற்றும் ரன்கெடியா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் சகாக்கள் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் சம்பவத்திற்கு இடையில், போதையில் இருந்த மேலும் சில கைதிகள் சிறைச்சாலையினுள் பாடல் பாடியவாறு இருந்த காட்சிகள் ஊடகங்களுக்கு வௌியிட்ட காணொளியில் உள்ளன.

இதேவேளை, மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் 150 க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK