அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி பெருந்திட்டம் ஜனாதிபதியின் கவனத்திற்கு


வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர நகரத்திற்கு இன்று (05) விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜயஸ்ரீ மகா போதிக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டார்.

புனித பூமிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் அடமஸ்தானவின் தலைமைத் தேரர் கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிரினிவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் ருவன்வெலி ரஜமகா விகாரைக்கு சென்று ருவன்வெலி ராஜமஹா விஹாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

ருவன்வெலி மகா சேயவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் அனுராதபுர புனித பூமி அபிவிருத்தி பெருந்திட்டம் பற்றி கேட்டறிந்தார்.

இத்திட்டத்தின் செலவு 450 மில்லியன் ரூபாவாகும். மூன்று வலயங்களின் கீழ் 28 திட்டங்களாக அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நிர்மாணப் பணிகள் 2024 டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படவுள்ளது. திட்டம் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலி தேவராஜ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் சில்வா, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK