தம்புள்ளை பொருளாதார மையத்தில் தேங்கிக்கிடக்கும் மூன்று மில்லியன் கிலோ காய்கறிகள்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தம்புள்ளை பொருளாதார மையத்தில் சுமார் மூன்று மில்லியன் கிலோ காய்கறிகள் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மீகொட விசேட பொருளாதார மையம் போன்ற பல பொருளாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்று தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சன்னா அரவ்வல கருத்து வெளியிடுகையில்,

குறிப்பாக ஊவா, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு அதிக அளவு காய்கறிகளை கொண்டு வருகிறார்கள்,

அதே நேரத்தில் ஏனைய மாகாணங்களிலிருந்து வரும் மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டன. இரண்டு நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளின் இப்போது சேகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த விடயத்தை ஆராய்ந்து, அரசாங்கத்தின் மூலம் காய்கறிகளை வாங்கவும், அவற்றை மற்ற மாகாணங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK