தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும் அமைச்சர் பவித்ராவுக்கு முன்னாள் அமைச்சர் மங்கள வழங்கும் அறிவுரை


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை, பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸை ஒழிக்க தனது உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதனையும் செய்வேன் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுகாதார அமைச்சரினால் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகவேண்டும். மாறாக தனது உயிரைத் தியாகமாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறத்தேவையில்லை. உயிர்த்தியாகம் அல்லது தற்கொலை என்பது பௌத்த தர்மத்திற்கு விரோதமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilwin)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK