ஞானசார தேரர், முஸ்லிம்களின் கலாச்சார விடையத்தில் தலையிடுவது ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற செயல்: கலாநிதி.வி.ஜனகன் விசனம்.

 


ஒரு இனம் அல்லது மதம் தனது இனத்தின் நம்பிக்கைகளை பெருமையாக பேசுவது அடிப்படைவாதமாகவோ அல்லது இனவாதமாகவோ அல்லது மதவாதமாகவோ அமையாது. ஆனால் தன்னுடைய இனம் அல்லது மதம் மட்டும் தான் என அகங்காரம் அடைவதும் தங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுக்குள் திணிக்க முயல்வதுமே அடிப்படைவாதம், இனவாதம் மற்றும் மதவாதம் என்பதனை ஞானசாரர் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும். என்றும் ஞானசார முஸ்லிம்களின் கலாச்சார விடையத்தில் தலையிடுவது ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற செயல் என்றும்

கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இலங்கையில் மிக அதிகமான பேசுபொருளாக இருப்பது கொரோனா வைரசின் பரவலும் அதனால் ஏற்படும் மரணங்களுமே. இதில் கொரோனா காரணமாக மரணம் அடையும் இஸ்லாமியர்களுடைய உடலங்களை அவர்களுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் புதைக்க வேண்டும் என்பது அவர்கள் சார்ந்த நியாயமான கோரிக்கையாகும். இதனை ஏற்றுக்கொண்ட நாட்டின் கௌரவ.ஜனாதிபதி அவர்கள் இதற்கான அனுமதியினை சில நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளார்.


இதனை நாம் வரவேற்க்க வேண்டும். இதில் பலர் அரசியல் செய்ய முற்பட்டார்கள். ஆனாலும் அதனைப் பொருப்படுத்தாது சரியான தீர்வை வழங்கிய நாட்டின் தலைவரின் இந்த செயற்பாடு பாரட்டுக்கு உரியதே.

உலக சுகாதார மையம் (WHO) வழங்கிய அறிக்கையிலும் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற நடைமுறை இருக்கும் போது சிறுபிள்ளைத் தனமான காரணங்களை முன்வைத்து பிற மதங்களின் நம்பிக்கைகளில் கைவைப்பது தான் அடிப்படைவாதம் என்பதனை ஞானசாரர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உலக சுகாதார மையத்தின் (WHO) பரிந்துரைகளின் அடிப்படையில் நீர் வழங்கல் பிரதேசத்தில் இருந்து 200 தொடக்கம் 350 மீட்டர் தூரத்தில் 1.5 தொடக்கம் 3 மீட்டர் ஆளத்தில் உடல்களை புதைக்க முடியும். உடல் புதைக்கப்பட்ட ஆளத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழ் நிலத்தடி நீரோட்டம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

கௌரவ.ஜனாதிபதி அவர்கள் WHO இன் பரிந்துரைகளை முறையாக பின்பற்றும்படி அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றார். எனவே இந்த பிரச்சனையில் வேறு விளக்கங்களை ஞானசாரர் போன்ற அடிப்படைவாதிகளுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார். இந்த அறிவிப்பினை மீண்டும் தமது அரசியல் துரும்பாக பயன்படுத்தி பிற மத்தத்தாருடைய மத நம்பிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என வினையமாக கேட்டுக்கொள்கிறேன்
என்று மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK