சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்த சமய வைபவம் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்றது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டதுடன்,அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு விசேட அனுமதியை வழங்கி இருந்தது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK