கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 6 பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நீக்கம்


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக Covid 19 வைரஸ்தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்றைய தினம் (23) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவிருப்பதாக Covid 19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

01. கொழும்பு மாவட்டம்

• பொரள்ளை

• வெல்லம்பிட்டி

• கொழும்பு கோட்டை

• கொம்பனித்தெரு

இருப்பினும் பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்துமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனித்தெருவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடந்தும் இருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 13 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கும்.

• மட்டக்குழி

• முகத்துவாரம் (மோதர)

• புளுமெண்டல்

• கொட்டாஞ்சேனை

• கிராண்ட்பாஸ்

• கரையோர பொலிஸ்

• டேம் வீதி

• மாளிகாவத்த

• தெமட்டகொட

• வாழைத்தோட்டம்

• மருதானை

• புறக்கோட்டை

• ஆட்டுபட்டித்தெரு


02. கம்பாஹ மாவட்டம்

• ஜாஹெல

• கடவத்தை

ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் அதே நிலைமையிலேயே இருக்கும்.

• நீர்கொழும்பு

• ராகம

• வத்தளை

• பேலியகொட

• களனி


03. களுத்துறை மாவட்டம்

களுத்றை மாவட்டத்தில் பண்டாரகம பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


• போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பமுனுமுல்ல (முஸ்லிம்) கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கோராவல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• அடுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கலகஹமண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK