தனிமைப்படுத்தல் கட்டளைக்கு மாறாக செயல்படுபவர்கள் அல்லது உண்மையான தகவல்களை மறைத்து சில ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரும் தங்களின் தகவல்களைப் போலியாக பதிவு செய்தால் அது ஆவணங்களை மோசடி செய்யும் குற்றத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் குற்றவியல் பிரிவு 399 இன் படி, போலியான தகவல்களை வழங்கி தவறான தகவல்களை பதிவு செய்தால் அத்தகைய நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என கூறியுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK