கடந்த 8 ஆம் திகதி முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் இவ்வாறான தாமதம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று (29) காலைதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
´கடந்த 23 ஆம் திகதி முதல் குறிப்பிடதக்க தாமதம் உள்ளது. முன்பைப் போன்று ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியாது. இவ்வாறு சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.´
இதேவேளை நாட்டில் சுகாதார பரிசோதகர்களுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
´நாட்டில் மொத்தமாக 1817 சுகாதார பரிசோதகர்களே உள்ளனர். அவர்களில் 1400 பரிசோதகர்களே சிரேஸ்டதுவமிக்கவர்கள. இதனால் நாம் தொடர்ச்சியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். இருப்பினரும் அண்மையில் இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர்களின் பயிற்சியும் குறைவடைந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமாயின் விரைவாக இரண்டு குழுக்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டியது அவசியம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்´
0 Comments