PCR பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?


பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடதக்க தாமதம் நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் இவ்வாறான தாமதம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (29) காலைதனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.

´கடந்த 23 ஆம் திகதி முதல் குறிப்பிடதக்க தாமதம் உள்ளது. முன்பைப் போன்று ஒரே நாளில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியாது. இவ்வாறு சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.´

இது தொர்பில் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள 
பயன்படுத்தப்படும் இயந்திரம் சேதமடைந்துள்ளது. இதனை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களிலும் 24 மணித்தியாலமும் தொடர்ந்து இயங்கியதால் இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தை பழுது பார்க்க சீனாவில் இருந்து ஒருவரை அழைக்க வேண்டும். அவரை நாளைய தினத்திற்குள் நாட்டுக்கு அழைத்துவர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.´

இதேவேளை நாட்டில் சுகாதார பரிசோதகர்களுக்கு பாரியதொரு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

´நாட்டில் மொத்தமாக 1817 சுகாதார பரிசோதகர்களே உள்ளனர். அவர்களில் 1400 பரிசோதகர்களே சிரேஸ்டதுவமிக்கவர்கள. இதனால் நாம் தொடர்ச்சியான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். இருப்பினரும் அண்மையில் இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர்களின் பயிற்சியும் குறைவடைந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமாயின் விரைவாக இரண்டு குழுக்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டியது அவசியம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்´

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK