"அல்ஹாஜ் முபாரக் மதனியுடைய மறைவு முஸ்லீம் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்"


அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடைய செயலாளர் அல்ஹாஜ் முபாரக் மதனியுடைய மறைவு முஸ்லீம் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 


அவர் தனது அனுதாப அறிக்கையில் குறிப்பிடுகையில், அல்ஹாஜ் முபாரக் மதனி அவர்கள்  ஜம்மியதுல் உலமாவுடைய செயலாளராக, உப தலைவராக பல பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒருவர். 


மகரகம கபூரிய்யா அறபுக் கல்லூரியை தனது வாழ்க்கையாகவே கருதி அதற்காகவே வாழ்ந்த ஒருவர். அதே போன்று பல்வேறு அரபுக் கல்லூரிகளையும், பள்ளிவாயல்களையும், உலமாக்களையும் உருவாக்குவதிலே அரும் பாடுபட்டவர். 


புகழை விரும்பாது மறைமுகமாக மார்க்கப் பணிகளை ஆற்றிய ஒரு மகான். என்னோடு மிக நெருக்கமாக பழகிய ஒருவர்.  அன்னாரது மறைவையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம். 


அல்லாஹுத்தாலா அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களது நல்லமல்களுக்காக மிக உயர்ந்த சுவனபதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக. என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அனுதாப அறிக்கையில்  மேலும் குறிப்பிட்டார்

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin