கொவிட் பரவல் - கொழும்பில் சீல் வைக்கப்பட்ட உணவகங்கள்


பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகங்கள் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்த உணவகங்களில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்த உணவகங்களில்  இருந்து உணவுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக மாநகரசபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக குறித்த நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் விடுதி ஒன்றில் இருந்த நபர்களும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK