இக்கட்டான நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான திராணியை உலகளாவிய முஸ்லிம் சமூதாயம் பெற்றிருப்பது இறைவன் வழங்கிய பெரும் பேறாக உள்ளது.


இலங்கையிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் கொவிட் - 19 நோய்த் தொற்று உட்பட பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இஸ்லாத்தின் இறுதி தூதுர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “மீலாதுன் நபி” செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வாழ்வின் எத்தகைய நிலைமைகளிலும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை என்பவற்றிலிருந்தே உரிய வழிகாட்டுதல்களை பெறுகின்றனர்.

அந்தவகையில், எல்லா விதமான நெருக்கடிகளுக்கும் மனவலிமையுடன் முகம் கொடுத்து இக்கட்டான நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான திராணியை உலகளாவிய முஸ்லிம் சமூதாயம் பெற்றிருப்பது இறைவன் வழங்கிய பெரும் பேறாக அமைந்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK