ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் - எதிர்க்கட்சி


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்  பதியூதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை   நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, முஜீபுர் ரஹ்மான், புத்திக்க பத்திரண உள்ளிட்டவர்களும் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.

ஏற்கனவே, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அதேவிதமாக ரிஷாட் பதியுதீனையும் அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, சுகாதார தரப்பினர் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK