நீதி அமைச்சினால் அறிவிப்பு


நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் மூலமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையின் கீழ் பொதுமக்கள் நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் காணப்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஆலோசனையின் அடிப்படையில், திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைப்பது தொடர்பான வழிகாட்டல்களை நீதி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறித்த முறைப்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK