எம்.என்.எம்.அப்ராஸ்-
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற சட்டத்தரணியும் பிரபல ஊடகவியலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அவர்களுடனான சமூக மேம்பாடு தொடர்பிலான சினேகபூர்வ கலந்துரையாடல் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை காரியாலயத்தில் நேற்று( 18) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச்.ரிஸ்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம் மற்றும் செயற்குழு, நிருவாக குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் இன நல்லுறவின் அவசியம் ஏனைய சமூகங்களுடனான உறவுகளை ஒற்றுமையுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம்
பற்றியும் சமூக மேம்பாடு தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின் நிலையை மேம்படுத்த வேண்டிய விடயங்ககள் எமது சமூகத்தின் இருப்பு மற்றும்
பொது அரசியலின் பின்னணியில் கற்ற சமூகத்தின் பங்களிப்புகள், சமூக ரீதியான அரசியல் கலாச்சாரத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் தொடர்பாகவும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் செயற்திட்டங்கள்முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய அவசியம் பற்றியும் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதனை கையாள வேண்டிய நடவடிக்கைகள்பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டன.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK