நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீன் 2020 ஆம் ஆண்டுக்கான "லங்கா தேசமான்ய" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மருதமுனையைச் சேர்ந்த சமூக சேவையின்பால் அதிக நாட்டமுள்ள பிரபல வர்த்தகரான இவர் தனது மாநகரசபை உறுப்புரிமைப் பதவிக்காலத்தின் போது காத்திரமான சமூக உதவிகளை நிறைவேற்றியிருந்தார்.
சமூகத்தின் குரலாய் மாநகர சபையில் மக்களின் தேவைக்காக ஒலித்த இவரது கருத்துக்கள் பல்வேறு சமூக அபிவிருத்திகளுக்கும் வித்திட்டிருந்தமை இவரது பதவிக்கால செயற்பாடுகளின் சிறப்பான பதிவுகளாகும்.
நேற்று (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவிலேயே இவர் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருதம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான முபாரிஸ் தாஜுதீன், வர்த்தக நிர்வாக இளமானி (BBA) பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளதோடு, தற்போது வர்த்தக நிர்வாக முதுமானி (MBA) கற்கை நெறியினை தொடர்ந்துவருகிறார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK