ராஜித சேனாரத்னவை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர்  மற்றும் மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் பொய்யான சாட்சிகள் சகிதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒகஸ்ட் 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே ராஜித சேனாரத்னவும் ரூமி மொஹமெட்டும் நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK