பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார் [UPDATE]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

>>>>>>>>>>   UPDATE 07:30AM <<<<<<<<<<<<

கடமைகளை ஆரம்பிக்கவுள்ள பிரதமர் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(11) அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதேவேளை சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞானபத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
தனது அரசியல் மிகவும் நெருக்கடியான காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போது மாவட்ட மக்கள் வழங்கிய ஆதரவை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK