காலியில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

வாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றையதினம் மாலை காலி, அம்பலங்கொட சவுத்லேண்ட்ஸ் கல்லூரியில் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற வான் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

வாக்கு மீது வாக்குப் பெட்டிகளுடன் பிராதான வீதியால் பயணித்த வாகனத்தின் மீது குறுக்கு வீதியொன்றினால் பயணித்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் மோதியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயங்களுடன் காலி, பலாபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வானில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லையெனவும், வாக்குப்பெட்டிகள் உரிய காலப்பகுதியில் வாக்கெண்ணும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK