கிழக்கில் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

எப்.முபாரக்-
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்ய 0262222352 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் அல்லது 0765318905 என்ற வட்ஸ்அப்/வைபர் இலக்கங்கள ஊடாக மேற்கொள்ளமுடியும்.

அத்துடன் 15200 வாக்காளர்கள் அஞ்சல் வாக்காளர்களாக வாங்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். எதிர்வரும் 13 ம்திகதி சுகாதாரத்துறையினரும் (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அலுவலர்கள்),14,15ம் திகதிகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் 16,17 ம் திகதிகளில் மாவட்ட செயலகம்,முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை வாக்கெண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரி செயற்படவுள்ளது.

மேலும் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை,செல்லுபடியான கடவுச்சீட்டு,செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்,அரச ஓய்வூதிய அடையாள அட்டை,முதியோர் அடையாள அட்டை,ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் 2019 சனாதிபதித் தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை தாங்கள் வதிந்துள்ள பிரிவின் கிராம அலுவலரிடம் ஒப்படைத்து புதுப்பித்த அடையாள அட்டை என்பன ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மேற்குறித்த அடையாள அட்டையற்றவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டையை தாமதமின்றி பெறல் வேண்டும்.

இதற்காக தங்களது மேலுடம்பின் 2 1/2சென்றிமீற்றர் அகலத்தையும் 3 சென்றிமீற்றர் உயரத்தையும் கொண்ட வர்ண அல்லது கறுப்பு வெள்ளை புகைப்பட பிரதிகள் இரண்டுடன் தங்களது கிராம அலுவலரை சந்தித்தல் வேண்டும். தற்காலிக அடையாள அட்டைகள் கிராம அலுவலரால் ஏற்கப்படும் இறுதித்திகதியாக 2020.07.29 அமைந்துள்ளது.

அத்துடன் தெளிவற்ற அடையாள அட்டைகள்,அமைச்சு, திணைக்களங்கள்,அரச நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படமற்ற வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK