களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைருக்கு பிணை

களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் S.A.D. நிலந்த உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், களுத்துறை வர்ணன் பெர்னாண்டோ மைதானத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் மற்றுமொரு தரப்பினருடன் இணைந்து மூடியிருந்த மைதானத்தின் நுழைவாயில் பூட்டை உடைத்து பலவந்தமாக நுழைய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK