சமூகக் கலவரங்களில் மக்களை பாதுகாக்க களத்தில் நின்ற காவலன்...!

இத்ரீஸ் நிசார் -
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடும் போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் தடுமாறும் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் இம்முறை நிதானமாகச் சிந்திக்கும் நிலைமைகளே ஏற்படும். சமூகத் தலைவர்கள் எனக்கூறுவோரின் சாதனைகள், சரித்திரங்களை மீட்டிப் பார்ப்பதற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த காலப்பதிவுகளே மக்களுக்கு உதவவுள்ளன.
துரதிஷ்டவசமா,க கடந்த காலத்தில் அரங்கேற்றப்பட்ட சமூக அக்கிரமங்களை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களப்பணியாற்றியமைக்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன. அந்த வகையில் கண்டிக் கலவரங்களிலும் காடையர்களின் வெறியாட்டங்களிலும் சளைக்காதும், களைக்காதும் களத்தில் நின்ற சமூகக் காவலனாக ரிஷாட் பதியுதீனைப் பார்க்க முடியும். அமைச்சரவையில் இருந்தவாறே, இவ்வாறான சமூகப் பதற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கத் தவறிய அனைத்து அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு, உளவுத் துறைக்குப் பொறுப்பானவர்களையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக விமர்சித்தது மட்டுமன்றி, கண்டிக்கவும் செய்தார்.
இத்துடன் மட்டும் இவரது சமூகப்பணிகள் நிற்கவில்லை. குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, தண்டனை வழங்கும்படியும் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK