“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை


பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காதுதிடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்றுகாணிகளை அளவீடு செய்வதும்அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்றுமக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்றுமக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதனால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுமுதலில் பிரதேசவாழ் மக்களோடு பேசவேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர்கிராம சேவையாளர் வாயிலாக பள்ளி நிர்வாகம்மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை தெளிவுபடுத்துவதோடுஅவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.

மக்களின் பூர்வீக விடயங்கள்உறுதிப்பத்திரம் மற்றும் இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரேஇதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று கூறினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK