பள்ளிவாசல்களில் 100 பேர் வரை தொழுகை நடத்தலாம்: சுகாதார அமைச்சு

ஐந்து வேளை மற்றும் ஜூம்மா தொழுகையில் கலந்து கொள்ள கூடியவர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் கூட்டு தொழுகைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் மல் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
மூன்று மாதங்களின் பின்னர் கடந்த 12ஆம் திகதி முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொழுகைக்காக திறக்கப்பட்டதுடன் தொழுகையில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், சமூக இடைவெளிகளை பேணி, இடவசதிகளுக்கு ஏற்ற வகையில் 100 பேர் வரை தொழுகையில் கலந்து கொள்ள முடியும் எனவும் கூட்டுத் தொழுகைகளை பல முறை நிறைவேற்ற முடியும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொழுகையில் ஈடுபடும் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK