கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

 


தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு

தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, கீழ் கண்டவாறு தெரிவித்தார்


" புகையிரத நிலைய அதிபர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்தின் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை கால அவகாசம் தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.


இந்த பரபரப்பான நேரத்தில் அவர் இதில் அவதானம் செலுத்துவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. புகையிரத பொது முகாமையாளர் குழுவொன்றை நியமிக்க தயாராகி வருகிறார்.


குழுவை நியமிப்பது நல்லது. பிரச்சினைகளைத் தவிர்க்கும் குழுக்களில் எங்களுக்குப் பங்கு இல்லை. எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர தீர்வொன்றை புகையிரத பொது முகாமையாளரின் ஊடாக அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட வேண்டும்.


இல்லையேல், செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்" என்றார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்