ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 (15) வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 (06) வாக்குகளையும் ஶ்ரீ லங்கா பொ
துஜன பெரமுன 3,957 (03) வாக்குகளையும் பொதுஜன எக்சத் பெரமுன 2,612 (02) வாக்குகளையும் பெற்றுள்ளன.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
வாக்களிப்பின் நிலவரப்படி 63.4% வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ ஏ. தர்மசிறி தெரிவித்திருந்தார்.
29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, வெளியான தேர்தல் முடிவுகளுக்கமைய,
- தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15
- ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03
- பொதுஜன எக்சத் பெரமுன - 2,612 வாக்குகள் - உறுப்பினர்கள் 02
- சுயேட்சைக்குழு 1 - 2,568 வாக்குகள் - உறுப்பினர்கள் 02
- பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி - 1,350 வாக்குகள் - உறுப்பினர்கள் 01
- தேசிய மக்கள் கட்சி - 521 வாக்குகள் - உறுப்பினர்கள் 01
- தெவன பரபுர கட்சி - வாக்குகள் 388 - உறுப்பினர்கள் 00
- ஜனசெத பெரமுன - வாக்குகள் 50 - உறுப்பினர்கள் 00
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK