மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.பைரூஸ், இன்னும் சபையின் முன்னாள் உறுப்பினர் வாஹித் மற்றும் மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் நவ்சீன் உள்ளிட்ட ஏனைய முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்ததாவது;
"எமது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சி மாறவில்லை. மாறாக குரங்குகள் போல, அங்கும் இங்கும் தாவித்திரிகின்றனர். ரணில் விக்ரமசிங்க தோற்றவுடன் மீண்டும் எம்மிடமே இவர்கள் வருவர். இதற்கு முன்னரும் இவ்வாறு இவர்கள், தாவித்தாவியே திரிந்தனர்.
கட்சித் தலைமை இனியும் இவ்விடயத்தில் தயவு காட்டக்கூடாது. நாலாம் கட்டை அருவி ஆறு தொடக்கம் மறிச்சுக்கட்டி வரைக்கும், மறிச்சுக்கட்டியிலிருந்து அரிப்பு வரைக்குமான எமது மீள்குடியேற்றத்தில், எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் கடுமையாக உழைத்தார்.
காடுகளை அழித்து, துப்புரவுப் பணிகளை முன்னெடுத்த காலத்தில் ஏற்பட்ட இடர்களை இல்லாது ஒழித்தவர் எமது தலைவர் ரிஷாட் பதியுதீன். வீடுகளை நிர்மாணித்து, வீதிகளைப் புனரமைத்ததுடன் வாழ்வாதார உவிகளை வழங்கினார்.
எமது பிராந்திய முன்னேற்றத்துக்கு இந்தத் தலைமையே வேண்டும். எங்களோடு இருந்து எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, எச்சில் ஆசைகளுக்காக சிலர் கட்சிக்குத் துரோகம் இழைத்துள்ளனர். இவர்களுக்கு இனிமேலும் மன்னிப்போ அல்லது கருணையோ காட்டக்கூடாதெனக் கோருகிறோம்" என்று தெரிவித்தனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK