எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இம்முறை ஜனாதிபதி தேர்தல் என்பது பல பிரிவினருக்கான போட்டி அல்ல. திருடர்களுக்கும் நல்லவர்களுக்குமான போட்டியாகும்.
மக்கள் தமது தெரிவை சரியாக செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சஜித் மற்றும் ரணிலின் மேடையில் இருப்பவர்கள் ஊழல் வாதிகள். அதனால்தான் அங்கும் இங்கும் மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
வர்களுக்கென கட்சியொன்று இல்லை. கொள்கையொன்று இல்லை. அதில் எஞ்சியுள்ளது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் மக்கள் இலகுவாக தமது தெரிவை மேற்கொள்ள முடியும்.
அநுர வெற்றி பெறுவது உறுதி. தற்போதைய கருத்து கணிப்புகள் பிரகாரம் அவர் 60 வீத வாக்குகளை பெறுவார். எதிர்காத்தில் இந்த வீதம் இன்னும் அதிகரிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK